டுவிட்டரில் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து: மறுப்பு தெரிவித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம்

டிசம்பர் 26

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறினர். 

இதனிடையே, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார் என டுவிட்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், தினகரனுக்கு வாழ்த்துக் கூறியதாக வெளியாகியுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைச்சர் உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. என்றார். 

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...