கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Coimbatore: கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 20 முதல் ஜூன் 5 வரை வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும். மறுபயணமாக, மே 20 முதல் ஜூன் 5 வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சென்னை செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 20 முதல் ஜூன் 5 வரை வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும். மறுபயணமாக, மே 20 முதல் ஜூன் 5 வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சென்னை செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.