டுவிட்டரில் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து: மறுப்பு தெரிவித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம்

டிசம்பர் 26

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறினர். 

இதனிடையே, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார் என டுவிட்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், தினகரனுக்கு வாழ்த்துக் கூறியதாக வெளியாகியுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைச்சர் உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. என்றார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...