சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முபாரக் கைது

கோவை, டிசம்பர்.26: 

சசிக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த   முபாரக் கைது செய்யப்பட்டுள்ளர். 

இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35)   2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும்  ஜி.எம் நகரை சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இதில் அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட  முபாரக் (28) தலைமறைவாக இருந்தார். 

அவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், முபாரக் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 அங்கு சென்ற போலீசார் முபாரக்-ஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...