டிசம்பர் 24
வாக்கு எண்ணும் மையத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே. நகர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக மற்றும் தினகரன் ஆதரவு முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகரில் பாஜகவை விட நோட்டா வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் மையத்தில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே. நகர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக மற்றும் தினகரன் ஆதரவு முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகரில் பாஜகவை விட நோட்டா வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.