துணி துவைக்கும் போது இரண்டு பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து பலி

கோவை, டிசம்பர் 23

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.

இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...