கோவை, டிசம்பர் 23
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.
இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.
இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.