துணி துவைக்கும் போது இரண்டு பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து பலி

கோவை, டிசம்பர் 23

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.

இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...