”சர்வதேச உயிர்அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு இன்று தொடக்கம்”


கோவை, டிசம்பர் 14

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல்” மாநாட்டைத் துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்தார். 

பல்கலைக் கழகத்தின் உயிர்வேதியல், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவியல் ஆகிய 4 அறிவியல் துறைகள் இணைந்து பிரம்மாண்டமான ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு” தொடங்கப்பட்டது. விழாவினைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் ஆ.கணபதி பேசுகையில், அறிவியல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அனைத்து ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடலுக்கு வழிவகுத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த தலைமுறை ஆய்விற்கான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த வந்தி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையும். என்றார். 

இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், பல்துறை ஆராய்ச்சி தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கும், மனித நோய்களை முறியடிக்கும் வழிகளுக்கும் தேவையான வழிமுறையாகும். எனக் கூறினார். 



இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து, அங்கிருந்த ஆய்வாளர்களோடு கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களும் இந்த அறிவியல் ஆய்வு மாநாட்டில் சுமார் 169 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...