”சர்வதேச உயிர்அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு இன்று தொடக்கம்”


கோவை, டிசம்பர் 14

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல்” மாநாட்டைத் துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்தார். 

பல்கலைக் கழகத்தின் உயிர்வேதியல், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவியல் ஆகிய 4 அறிவியல் துறைகள் இணைந்து பிரம்மாண்டமான ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு” தொடங்கப்பட்டது. விழாவினைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் ஆ.கணபதி பேசுகையில், அறிவியல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அனைத்து ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடலுக்கு வழிவகுத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த தலைமுறை ஆய்விற்கான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த வந்தி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையும். என்றார். 

இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், பல்துறை ஆராய்ச்சி தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கும், மனித நோய்களை முறியடிக்கும் வழிகளுக்கும் தேவையான வழிமுறையாகும். எனக் கூறினார். 



இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து, அங்கிருந்த ஆய்வாளர்களோடு கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களும் இந்த அறிவியல் ஆய்வு மாநாட்டில் சுமார் 169 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...