ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

கேரளா, டிசம்பர் 14

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள பெரும்பாவூர் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜிஷா கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜிஷா வீட்டின் அருகேயுள்ள ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிருல் இஸ்லாம் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அமிருல் இஸ்லாமைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, அமிருல் இஸ்லாம் தான் கொலை செய்தார் என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவருக்கான தண்டனை விபரத்தினை இன்று (டிசம்பர் 14) எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. அதில், குற்றவாளியான அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...