ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

கேரளா, டிசம்பர் 14

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள பெரும்பாவூர் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜிஷா கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜிஷா வீட்டின் அருகேயுள்ள ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிருல் இஸ்லாம் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அமிருல் இஸ்லாமைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, அமிருல் இஸ்லாம் தான் கொலை செய்தார் என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவருக்கான தண்டனை விபரத்தினை இன்று (டிசம்பர் 14) எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. அதில், குற்றவாளியான அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...