கோவை, நவம்பர் 6
ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைத்திட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி இந்து முன்னணி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்த இடத்தில் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமாக ஆலையம் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போரட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ராமர் கோவில் கட்டுவதற்கு காஷ்மீர் மற்றும் அயோத்தியிலுள்ள முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.
ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைத்திட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி இந்து முன்னணி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்த இடத்தில் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமாக ஆலையம் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போரட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ராமர் கோவில் கட்டுவதற்கு காஷ்மீர் மற்றும் அயோத்தியிலுள்ள முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.