AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி, பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். புரட்சித்தலைவர் MGR மற்றும் அம்மாவின் பாதையிலிருந்து கழகம் விலகியதை காரணமாக கூறி உணர்ச்சிகரமான கடிதம் வெளியிட்டுள்ளார்.


Coimbatore: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிலைமையால் மனம் வெதும்பி, தனது பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கழகத்தின் தற்போதைய போக்கு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.



புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் M.G.Ramachandran அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா J.Jayalalithaa அவர்களால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்து தொண்டர்களுக்கும் தெரிந்ததே என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




இருப்பினும், கட்சியின் எதிர்கால நலன் கருதி அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்படாவிட்டாலும், கழக வேட்பாளருக்கு வெற்றி ஒன்றே நோக்கம் என்று இரவு பகல் பாராமல் உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கந்தவேல். அந்த உழைப்பினை தொண்டர்களும் தொகுதி மக்களும் நன்கறிவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடக்கின்ற நிகழ்வுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி வழிதெரியாமல் தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது கழகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, புரட்சித்தலைவர் M.G.Ramachandran மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பாதைக்கு கழகம் ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.




எனவே, இத்தனை ஆண்டுகள் இந்த இயக்கத்தில் பணிபுரிய வாய்ப்பளித்த கழகத்தின் உண்மை தொண்டர்களுக்கு பெரும் மன அழுத்தத்துடனும் வேதனையுடனும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பதவியிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று முதல் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.




உள்ளாட்சியில் கட்சி வேறுபாடின்றி தனக்கு ஆதரவளித்து, சிறந்த ஊராட்சியாக தேசிய விருது பெற வைத்த தனது முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியின் பொதுமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, வரும் காலத்தில் தனது அரசியல் மற்றும் பொதுப்பணியில் அவர்களின் பேராதரவோடு வீறு நடைபோடுவேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார் வி.பி.கந்தவேல்.




AIADMK கட்சியில் உள்கட்சி பிரச்சினைகள் தொடர்ந்து வந்த நிலையில், இப்போது மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் விலகத் தொடங்கியிருப்பது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...