22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக சுட்டிக்காட்டி, 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் வலியுறுத்தி வருகிறது.



வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடு செய்தல், பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகளை கேட்பது என மருத்துவத்துறையில் ஒன்றிய அரசு அநியாயத்தை அரங்கேற்றி வருகிறது என்று இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது நீட் தேர்வு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், கடந்த காலங்களில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நினைக்கும்போது, மாணவச் செல்வங்களின் வாழ்வாதாரமும், மருத்துவர் கனவும் எவ்வாறு ஒன்றிய அரசால் சூறையாடப்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கையில் நெஞ்சமே பதறுகிறது என்று பல்சமய நல்லுறவு இயக்கம் தெரிவித்துள்ளது.

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று இயக்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சட்டத்திற்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுடன் அரங்கேறும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் Haji J Muhammad Rafi வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்து வருவதாகவும், இதனை ஒழிக்க தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...