22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக சுட்டிக்காட்டி, 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் வலியுறுத்தி வருகிறது.



வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடு செய்தல், பாடப்புத்தகங்களில் இல்லாத கேள்விகளை கேட்பது என மருத்துவத்துறையில் ஒன்றிய அரசு அநியாயத்தை அரங்கேற்றி வருகிறது என்று இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது நீட் தேர்வு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், கடந்த காலங்களில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நினைக்கும்போது, மாணவச் செல்வங்களின் வாழ்வாதாரமும், மருத்துவர் கனவும் எவ்வாறு ஒன்றிய அரசால் சூறையாடப்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கையில் நெஞ்சமே பதறுகிறது என்று பல்சமய நல்லுறவு இயக்கம் தெரிவித்துள்ளது.

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று இயக்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சட்டத்திற்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுடன் அரங்கேறும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் Haji J Muhammad Rafi வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்து வருவதாகவும், இதனை ஒழிக்க தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...