கோவை, டிசம்பர் 4
டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் ஊழியர்களைக் குறிவைத்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை என்றும், சமூக விரோதிகளால் கொள்ளையடித்துச் செல்லப்படும் பணத்தை ஊழியர்களே செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் நிர்பந்திப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்களின் மருத்துவச் செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தில் இணைத்திட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களிடம் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் ஊழியர்களைக் குறிவைத்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை என்றும், சமூக விரோதிகளால் கொள்ளையடித்துச் செல்லப்படும் பணத்தை ஊழியர்களே செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் நிர்பந்திப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்களின் மருத்துவச் செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தில் இணைத்திட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களிடம் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர்.