ஆர்.கே. நகர் தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு. நாகராஜன் அறிவிப்பு

டிசம்பர் 02

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு. நாகராஜன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்கு பிறகு வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடக் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர். முன்னதாக, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் தற்போது போட்டியிட மறுப்பதால் புதிய வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சித் திட்டமிட்டு வந்தது. 

ஆர்.கே. நகர் தேர்தலில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜனே போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆர்.கே. நகரில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...