டிசம்பர் 02
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு. நாகராஜன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்கு பிறகு வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடக் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர். முன்னதாக, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் தற்போது போட்டியிட மறுப்பதால் புதிய வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சித் திட்டமிட்டு வந்தது.
ஆர்.கே. நகர் தேர்தலில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜனே போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆர்.கே. நகரில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு. நாகராஜன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்கு பிறகு வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடக் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர். முன்னதாக, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் தற்போது போட்டியிட மறுப்பதால் புதிய வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சித் திட்டமிட்டு வந்தது.
ஆர்.கே. நகர் தேர்தலில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜனே போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆர்.கே. நகரில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.