நவம்பர் 29
இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலியாக தயாரிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மாத்திரை, மருந்துகள் தரக்குறைவாக இருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தரமற்ற, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேதிப்பொருள் பல மாத்திரைகளில் இருப்பதாகவும், அவற்றை உட்கொள்ளும்போது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 10-ல் ஒரு மருந்து நோயை குணப்படுத்தாது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மலேரியா மற்றும் ஆன்டி பயோடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலியாக தயாரிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மாத்திரை, மருந்துகள் தரக்குறைவாக இருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தரமற்ற, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேதிப்பொருள் பல மாத்திரைகளில் இருப்பதாகவும், அவற்றை உட்கொள்ளும்போது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 10-ல் ஒரு மருந்து நோயை குணப்படுத்தாது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மலேரியா மற்றும் ஆன்டி பயோடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது.