ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து அச்சமின்றி புகார் அளிக்கலாம்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

கோவை, நவம்பர் 28

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்று விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கோவையில் 50 பேர் விசாரணை ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 39 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும்.

கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகும் பொதுமக்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது.காவல்துறையினர் மிரட்டினால் பயமின்றி விசாரணை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தற்போது கலவரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை நடந்த விசாரணையில் காவல்துறைக்கு சாதகமாகவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு காவல்துறையினர் தீ வைத்தது தொடர்பான வீடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம் பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவது குறைவாகவே உள்ளது. அடுத்த மாதம் மதுரையில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விசாரணைக் காலம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...