ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து அச்சமின்றி புகார் அளிக்கலாம்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

கோவை, நவம்பர் 28

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்று விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கோவையில் 50 பேர் விசாரணை ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 39 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும்.

கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகும் பொதுமக்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது.காவல்துறையினர் மிரட்டினால் பயமின்றி விசாரணை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தற்போது கலவரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை நடந்த விசாரணையில் காவல்துறைக்கு சாதகமாகவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு காவல்துறையினர் தீ வைத்தது தொடர்பான வீடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம் பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவது குறைவாகவே உள்ளது. அடுத்த மாதம் மதுரையில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விசாரணைக் காலம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...