கோவை, நவம்பர் 28
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலியானார்.
மதுரை மாவட்டம் உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமர் (39). கோவை மாநகர ஆயுதப்படையில் வாகன பிரிவில் காவலராக பணியாற்றி வந்த இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த 22-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி காவலர் இன்று காலை பரிதாபமாக பலியானார்.
கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலியானார்.
மதுரை மாவட்டம் உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமர் (39). கோவை மாநகர ஆயுதப்படையில் வாகன பிரிவில் காவலராக பணியாற்றி வந்த இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த 22-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி காவலர் இன்று காலை பரிதாபமாக பலியானார்.
கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.