கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலி

கோவை, நவம்பர் 28

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு காவலர் பலியானார். 

மதுரை மாவட்டம் உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமர் (39). கோவை மாநகர ஆயுதப்படையில் வாகன பிரிவில் காவலராக பணியாற்றி வந்த இவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த 22-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டார். 

அவரது ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். 

தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால், சிகிச்சை பலனின்றி காவலர் இன்று காலை பரிதாபமாக பலியானார். 

கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...