கோவை, நவம்பர் 27
கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, கரும்புகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
105 ஆண்டுகள் பழமையான கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தை இடமாற்றம் செய்வதால், கரும்பு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர்கள், இந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, கரும்புகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
105 ஆண்டுகள் பழமையான கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தை இடமாற்றம் செய்வதால், கரும்பு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர்கள், இந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.