கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 27

கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, கரும்புகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

105 ஆண்டுகள் பழமையான கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தை இடமாற்றம் செய்வதால், கரும்பு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர்கள், இந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...