திருப்பூர், நவம்பர் 28
திருப்பூர், பாளையக்காடு சூர்யா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (49). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாராக்காள் (50) என்பவரிடம் இருந்து அந்த பகுதியில் உள்ள 10 1/2செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.
அதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பனமாக மொத்தம் மாராக்காளிடம் ரூ.13 லட்சத்தை செந்தில்நாதன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மாராக்காள் அந்த நிலத்துக்கான பவர் வாங்கி விட்டு அதன்பிறகு செந்தில்நாதனுக்கு தெரியாமல் பவரை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் செந்தில்நாதன், மாராக்காளிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், மாராக்காள் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார்.
இதையடுத்து மாராக்காள் மற்றும் அவருடைய மகன்களாக செல்வராஜ் (36), பழனிசாமி(35) ஆகியோர் சேர்ந்து செந்தில்நாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் மாராக்காள் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், பாளையக்காடு சூர்யா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (49). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாராக்காள் (50) என்பவரிடம் இருந்து அந்த பகுதியில் உள்ள 10 1/2செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.
அதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பனமாக மொத்தம் மாராக்காளிடம் ரூ.13 லட்சத்தை செந்தில்நாதன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மாராக்காள் அந்த நிலத்துக்கான பவர் வாங்கி விட்டு அதன்பிறகு செந்தில்நாதனுக்கு தெரியாமல் பவரை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் செந்தில்நாதன், மாராக்காளிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், மாராக்காள் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார்.
இதையடுத்து மாராக்காள் மற்றும் அவருடைய மகன்களாக செல்வராஜ் (36), பழனிசாமி(35) ஆகியோர் சேர்ந்து செந்தில்நாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் மாராக்காள் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.