ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்பூர், நவம்பர் 28

திருப்பூர், பாளையக்காடு சூர்யா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (49). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாராக்காள் (50) என்பவரிடம் இருந்து அந்த பகுதியில் உள்ள 10 1/2செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 

அதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பனமாக மொத்தம் மாராக்காளிடம் ரூ.13 லட்சத்தை செந்தில்நாதன் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் மாராக்காள் அந்த நிலத்துக்கான பவர் வாங்கி விட்டு அதன்பிறகு செந்தில்நாதனுக்கு தெரியாமல் பவரை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் செந்தில்நாதன், மாராக்காளிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால், மாராக்காள் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். 

இதையடுத்து மாராக்காள் மற்றும் அவருடைய மகன்களாக செல்வராஜ் (36), பழனிசாமி(35) ஆகியோர் சேர்ந்து செந்தில்நாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக செந்தில்நாதன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் மாராக்காள் மற்றும் அவரது இரு மகன்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...