கோவை, நவம்பர் 27
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.