வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கோவை, நவம்பர் 27

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். 

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...