"ரகுவை கொன்றது யார்?": அழிக்கப்பட்டது சாலையில் எழுதப்பட்ட வாசகம்

கோவை, நவம்பர் 27

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர். 

சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.



Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...