"ரகுவை கொன்றது யார்?": அழிக்கப்பட்டது சாலையில் எழுதப்பட்ட வாசகம்

கோவை, நவம்பர் 27

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர். 

சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...