கோவை, நவம்பர் 26
ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.

கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.

கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.