கோவை, அக்டோபர்.31: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார்.

சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளின் போது அரசு பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிச்சிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்பர்.
அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்த ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், அவரது அலுவலகத்தில் சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார். தொடர்ந்து, ஒற்றுமை நாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழியெற்றனர்.


சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளின் போது அரசு பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிச்சிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்பர்.
அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்த ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், அவரது அலுவலகத்தில் சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார். தொடர்ந்து, ஒற்றுமை நாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழியெற்றனர்.
