கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிப்பு

கோவை, அக்டோபர் 31: சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

கோவை, சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளி மற்றும் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து இன்று நடைபெற்ற "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதனை துணை இணை காவல்துறை ஆணையர் ஏ.முருகசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுகளைப் போற்றும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், கேந்திரிய வித்தியாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாவித்திரி. டி.ராஜன், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில், கோவை புலனாய்வு இயக்குநரக துணை இயக்குநர் கரீனா பி.தெங்கமம் தேச ஒற்றுமை குறித்து உரையாற்றினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...