கோவை, அக்டோபர் 31: சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.
கோவை, சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளி மற்றும் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து இன்று நடைபெற்ற "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதனை துணை இணை காவல்துறை ஆணையர் ஏ.முருகசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுகளைப் போற்றும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், கேந்திரிய வித்தியாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாவித்திரி. டி.ராஜன், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை புலனாய்வு இயக்குநரக துணை இயக்குநர் கரீனா பி.தெங்கமம் தேச ஒற்றுமை குறித்து உரையாற்றினார்.
கோவை, சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளி மற்றும் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து இன்று நடைபெற்ற "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதனை துணை இணை காவல்துறை ஆணையர் ஏ.முருகசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுகளைப் போற்றும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், கேந்திரிய வித்தியாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாவித்திரி. டி.ராஜன், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை புலனாய்வு இயக்குநரக துணை இயக்குநர் கரீனா பி.தெங்கமம் தேச ஒற்றுமை குறித்து உரையாற்றினார்.