கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (22.10.2017) தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் துப்புரவு சுகாதாரப்பணிகள் தொடர்பான திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார்.
மேலும், ஊரக பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (22.10.2017) தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் துப்புரவு சுகாதாரப்பணிகள் தொடர்பான திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார்.
மேலும், ஊரக பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.