விவசாயிகள் பெயரில் இடைத்தரகர்கள்: கோவையில் உழவர் சந்தையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்து அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் இன்று உழவர் சந்தையை முற்றுகையிட்டனர்.



சிங்காநல்லூர் ஹவுசின்ங் யூனிட் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் திரளாக இங்கு காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தையாக விளங்கி வரும் இங்கு சமீப காலமாக நிர்ணயம் செய்யப்படும் விலைபட்டியலுக்கு அதிகமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல காய்கறி வாங்க வந்த பொது மக்கள், உழவர் சந்தை விலைபட்டியலை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உழவர் சந்தை அதிகாரியான கில்டா ஸ்டீபனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபடுவதாகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கு உழவர் சந்தையில் விற்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இது போன்று இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்துவிட்டால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறி உடனடியாக இடைத்தரகர்களை வெளியேற்ற வேண்டும். விலைப்பட்டியலில் உள்ளவாறு நியாயமான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உழவர் சந்தை அதிகாரி கில்டா ஸ்டீபனிடம் மனு அளித்தனர்.



மக்களின் இந்த திடீர் முற்றுகையால் சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...