கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம், கரியம்பாளையம் ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது.
அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது.
அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.
இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.