மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது

கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...