கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.