வனவிலங்குகளின் நலன் கருதி வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும், வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும், வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.