பொய்வழக்கு தொடர்ந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரி மனு

தனது பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மீது பொய் வழக்கு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...