தனது பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மீது பொய் வழக்கு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபாதை வியாபாரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் நடைபாதை பழவியாபாரம் செய்து வருபவர் காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி 100 அடி சாலையில் பகலில் கம்பங்கூழ் கடையும், மாலையில் இட்லி வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஸ்வரியின் இட்லி கடைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆய்வாளர் ஜெயராஜ், காவலர் கணேசன், எந்த அனுமதியுமின்றி கடை வைத்ததாகக் கூறி காந்தியை இரவு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அனுமதியின்றி கடை வைத்ததால், 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் தாயை வரவழைத்து அபராதத் தொகையான ரூ.1,200 செலுத்திவிட்டு, வியாபாரி காந்தி காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தனது பணத்தை அபகரித்தது மட்டுல்லாமல் பொய்வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்கள் மோகன், பாலகன், ஜெயராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், அபகரித்த பணத்தை திரும்பப்பெறக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.