கோவை மாவட்ட ஆர்எஸ்எஸ் சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் இணைந்து இன்று (அக்டோபர் 15) காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையத்தில் தூய்மை பணி செய்தனர்.

இந்த களப்பணியில் ஆர்எஸ்எஸ் மாநில சேவை பிரிவு இணைச் செயலாளர் ஆனந்த், கோட்ட சேவை பிரிவு செயலாளர் மனோஜ் குமார், அமைப்பாளர் சுரேஷ் குமார், மாவட்டச் செயலாளர் குருவாயூரப்பன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
