டெங்குவை ஒழிக்க தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் சுகாதாரம் பேணிகாத்திட கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் தங்கள் சுற்றுப்புரத்தில் சுகாதாரம் பேணிகாத்திட மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.,14) டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது, கோவை மாவட்டத்தில் காய்ச்சல்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் கட்டுப்படுத்திடவும், முற்றிலுமாக தடுத்திடவும், எண்ணற்ற தொடர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல்கள் அல்ல, டெங்கு காய்ச்சல் என்பது ஒருவகையான வைரஸ் காய்ச்சலே ஆகும். நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி பகல் பொழுதில் கடிக்கும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எனவே கல்லூரிகள், மருத்துவமனைகள் தங்கள் சுற்றுப்புறத்திலுள்ள தேவயைற்ற பழைய பொருட்களில் தண்ணீர் அல்லது மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மொட்டை மாடியில் போடப்பட்டுள்ள பயன்படுத்தாத தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்கள் போன்றவற்றினை முறையாக அப்புறப்படுத்திட வேண்டும். மேலும், காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடம் உரிய பரிசோதனைகளின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கென பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட வேண்டும். இரத்த அணுக்களின் அளவீடுகளை ஒரு நாளைக்கு மூன்றுமுறை பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இரத்த தட்டணுக்களின் இருப்பு போதிய அளவில் உள்ளது.

அதுபோலவே, கல்லூரிகளில் மற்றும் கல்லூரி விடுதிகளை சுத்தமாகவும், டெங்கு காரணிகள் இல்லாத பகுதிகளாகவும் மாற்ற வேண்டியது கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகும். சுற்றுப்புறப்பகுதிகளை தூய்மைபடுத்தி ஏடிஸ் கொசு உற்பத்தியாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்கள் வாயிலாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியிலுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் 5 தினங்கள் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். 

விடுதிகளில் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் இருக்கும் மாணவ மாணவியர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்.

கோவை மாவட்ட நிர்வாகமும், டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக தூய்மை காவலர்கள், மஸ்தூர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்குதல், இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊரக பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், தேவைப்படும் இடங்களில் கூடுதாலன மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமுகாம்கள் மேற்கொள்ளுதல், திரையரங்குகள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் குறும்படங்கள் மூலம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இச்சிறப்பு முயற்சிக்கு தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். 

இவ்வாய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .துரை.ரவிச்சந்திரன், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் .சந்திரசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாநகர சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்திவேல் ஆகியோர் உட்பட தனியார் கல்லூரி, மருத்துவமனை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...