சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கோவை மாகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.,14) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32, விளாங்குறிச்சி, ஸ்ரீ தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள 35 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, பவன் பூங்கா, பார்க் சைட் 1 மற்றும் 2 (புதிய தில்லை நகர் விரிவாக்கம்) பகுதியில் உள்ள 17.65 சென்ட் பரப்பும், வார்டு எண்.19, வீரகேரளம் ராஜூ நாயுடு லேஅவுட் பகுதியில் உள்ள 10.67 சென்ட் பரப்பும், அதே பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10.71 சென்ட் பரப்பளவிற்கான இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.28, சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன் ( பகுதி 2) பகுதியில் உள்ள 18 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 இளங்கோவன் நகர் ( பார்க் சைட்1 மற்றும் 2 ) பகுதியில் உள்ள 25 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 106.32 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து கோவை மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மீட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மாநகர நகரமைப்பு பிரிவின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...