உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையுடன் இணைந்து மாதிரி செயல்விளக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் 1989-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி உலக பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டுதோறும் பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு, அடுத்த தலைமுறைக்கு சொல்ல வாழ்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், மரணத்தை குறைத்தல் என்பது பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்தியாக வெளியிடப்பட்டது.
இந்த உலக பேரிடர் குறைப்பு தினமானது, இந்தியாவிலும், மாவட்ட அளவில், சரியான விழிப்புணர்வு பாதையில் அனுசரிக்கப்படுகிறது. தாலுகா வாரியாக, பள்ளி மற்றும் கல்லூரிகளையும், தீயணைப்புத்துறையினரையும் ஒருங்கிணைந்து, பேரிடர் மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த மாதிரி செயல்விளக்கம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (அக்.,13) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது குறித்து தீயணைப்புத் துறையின் சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் 1989-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி உலக பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டுதோறும் பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு, அடுத்த தலைமுறைக்கு சொல்ல வாழ்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், மரணத்தை குறைத்தல் என்பது பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்தியாக வெளியிடப்பட்டது.
இந்த உலக பேரிடர் குறைப்பு தினமானது, இந்தியாவிலும், மாவட்ட அளவில், சரியான விழிப்புணர்வு பாதையில் அனுசரிக்கப்படுகிறது. தாலுகா வாரியாக, பள்ளி மற்றும் கல்லூரிகளையும், தீயணைப்புத்துறையினரையும் ஒருங்கிணைந்து, பேரிடர் மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த மாதிரி செயல்விளக்கம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (அக்.,13) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது குறித்து தீயணைப்புத் துறையின் சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.