கோவை மாவட்டம் டவுன்ஹாலில் உள்ள வைஷியாள் வீதியைச் சேர்ந்த தியாகராஜன் மொத்த நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில், ஜீவா, சேகர் ஆகிய இரண்டு ஊழியர்கள் ஊதியத்திற்கு பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் நகையை விற்பனை செய்வதற்காக இரண்டரை கிலோ நகையுடன் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அரை கிலோ நகைகள் மட்டுமே விற்பனையானதால், எஞ்சிய 2 கிலோ நகையுடன் இருவரும் கோவைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். பேருந்து கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது, ஜீவா, சேகரிடம் இருந்த 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அவர்கள் கோவை சாய்பாபா காலனியில் உள்ள போலீஸில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார், புகார் அளித்த ஜீவா, சேகர் மற்றும் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு அரை கிலோ நகைகள் மட்டுமே விற்பனையானதால், எஞ்சிய 2 கிலோ நகையுடன் இருவரும் கோவைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். பேருந்து கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது, ஜீவா, சேகரிடம் இருந்த 2 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அவர்கள் கோவை சாய்பாபா காலனியில் உள்ள போலீஸில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார், புகார் அளித்த ஜீவா, சேகர் மற்றும் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.