ஆட்சியை தக்கவைக்க துடிக்கும் அதிமுக அரசு மக்கள் நலனை பாதுகாக்க தவறிவிட்டது - கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி



கோவை அரசு மருத்துவமனையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி, பழம் போன்ற உணவு வகைகளை கொடுத்த பிரேமலதா விஜயகாந்த் மருத்துவர்களிடம் டெங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. 

குறிப்பாக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். பல விதமான காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் டெங்குவால் பாதிக்கப்பட்டோரே அதிகம்.

இவை அனைத்திற்கும் காரணம் தமிழகத்தில் சுத்தமில்லாததே ஆகும். அதிமுக அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் செலுத்தும் கவனத்தை பொது மக்கள் மீதும் செலுத்தியிருக்க வேண்டும்.

டெங்குவால் கோவையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் புள்ளி விபரங்கள் தவறாக கொடுக்கப்படுகின்றது என்று அவர் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதி இல்லாதது இந்த அவல நிலைக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை இதுவரை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் டெங்கு விவகாரத்தில் தமிழக அரசிற்கு உதவி செய்ய வேண்டும்.

மழை, வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோரை காப்பதில் முதலில் களத்தில் இறங்குவது தேமுதிக. தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை இன்று பார்வையிட்டு வருகின்றனர். திருப்பூர், கோவையை போல திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவு டெங்கு பாதிப்பு இருப்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு சென்றுள்ளார். 

டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளின் போது பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே டெங்கு ஒழிப்பு சாத்தியம் என ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

நொய்யல் ஆற்றில் குளிப்பதனால் தான் நுரை வருகிறது என அமைச்சர் கருப்பண்ணன் சொல்வது வேடிக்கையாக உள்ளது. தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றது நீட்டுக்காக இல்லை. தன் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது தான் காரணம். இந்த ஆட்சியே ஒரு மர்மமான ஆட்சியாக உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம் விலகினால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும். இந்த ஆட்சி வெகு விரைவில் கலைக்கப்படும். நல்ல தீர்ப்பு 4 ம் தேதி வரும்.

மேலும், நடிகர்கள் யார் கட்சி துவங்கி அரசியலுக்கு வந்தாலும் சமாளிக்கும் திறமை தேமுதிகவிற்கு இருக்கின்றது."

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



முன்னதாக, தேமுதிக-வினர் கோவை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...