“18 வயது நிறைவடையாத மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே” -உச்சநீதிமன்றம்

18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவரின் விருப்பமின்றி கணவர் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா அமர்வு அளித்த தீர்ப்பில், கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக அந்த சிறுமி புகார் அளித்தால் கணவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும், அந்த சிறுமியின் ரத்த சொந்தங்கள் புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த அரசியல் சாசன பிரிவு 375ல் கணவருக்கு வழங்கியிருந்த விதிவிலக்கை நீக்கி தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, 18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணமாகி அவரின் விருப்பத்துடன் கணவர் உடலுறவு வைத்துக் கொண்டாலும் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இது போன்று 2கோடியே 30லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...