டெல்லியை போல மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை... கவலையில் வியாபாரிகள்

மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையானது வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த ஆண்டு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பட்டாசு விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை தடை விதித்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுவரை பட்டாசு வாங்கியவர்கள் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு விற்பனைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாட்டை தவிர்க்க , பட்டாசு விற்பனைக்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு தீபாவளி கறுப்பு தீபாவளியாக மாறிவிட்டது என்று டெல்லி வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படவில்லை என்பதால், மக்கள் அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு தீபாவளி கறுப்பு தீபாவளியாக மாறிவிட்டது என டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல கோடி ரூபாய் அளவில் சிவகாசியில் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பட்டாசு விற்பனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் லட்சக்கணக்கான பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர் என சி.ஏ.ஐ.டி. எனப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...