பெங்களூாில் இருந்து கேரள மாநிலம், கொச்சினுக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் கோவை வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் யூனோபால் (37) ஓட்டிவந்தார்.
இந்நிலையில், கோவை மதுக்கரை- செட்டிபாளையம் சுங்க சாவடி அருகே அதிகாலை 5 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலேயே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து காயம் அடைந்தோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மதுக்கரை- செட்டிபாளையம் சுங்க சாவடி அருகே அதிகாலை 5 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலேயே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து காயம் அடைந்தோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.