கேளிக்கை வரி பிரச்னையில் 2 நாட்களில் நல்ல முடிவு வெளியாகும் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.
கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், இன்று அல்லது நாளை நல்ல முடிவு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டிக்கெட் கட்டண விலை உயர்வால் திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறிய விஷால், இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் வரை, புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்றும் கூறினார்.
கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், இன்று அல்லது நாளை நல்ல முடிவு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டிக்கெட் கட்டண விலை உயர்வால் திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறிய விஷால், இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் வரை, புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்றும் கூறினார்.