சேலத்தில் அமைக்கப்பட உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-
"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.
தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-
"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.
தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.